கிரிக்கெட் (Cricket)

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நிதிஷ்குமார், அர்ஷ்தீப் சிங் விலகல் - பிசிசிஐ அறிவிப்பு

Published On 2025-07-21 13:33 IST   |   Update On 2025-07-21 13:33:00 IST
  • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
  • 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் காயமடைந்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

Tags:    

Similar News