கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: மதுரை அணிக்கு எதிராக நெல்லை பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-18 19:55 IST   |   Update On 2025-06-18 19:55:00 IST
  • நெல்லை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
  • மதுரை அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

சேலம்:

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி 3 ஆட்டங்களில் ஆடி (2 வெற்றி, 1 தோல்வி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மதுரை அணி 3 ஆட்டங்களில் ஆடி (1 வெற்றி, 2 தோல்வி 2 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.  

Tags:    

Similar News