ஐபிஎல் 2025: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 72 ரன் எடுத்தார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.
சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என கடைசி இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை