ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் 2025- 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது பஞ்சாப்

Published On 2025-04-15 22:44 IST   |   Update On 2025-04-15 22:57:00 IST
  • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
  • கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி காக் 2 ரன்களும், நரைன் 5 ரன்களும், ரஹானே 17 ரன்களும், ரகுவன்ஷி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

Tags:    

Similar News