null
எனக்கு வயது 50.. இது போன்ற ஆட்டத்தை என்னால் தாங்க முடியாது- ரிக்கி பாண்டிங்
- பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை.
- இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. பரபரப்பாக சென்ற போட்டியில் அடுத்த 33 ரன்கள் எடுப்பதற்குள் மீதி 7 விக்கெட்டுகளையுமே கொல்கத்தா அணி இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் எனக்கு 50 வயதாகிறது என்றும் இதுபோன்ற பரபரப்பான போட்டியை தவிர்க்க வேண்டும் என பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது இதய துடிப்பு அதிகமாகவே உள்ளது. எனக்கு 50 வயது ஆகிறது. இது போன்ற பரபரப்பான ஆட்டத்தை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற குறைந்த இலக்கு கடினமானதாக இருக்கும் என வீரர்களிடம் 2-வது இன்னிங்சிஸ் தொடங்கும் முன்பே கூறினேன்.
பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை என்பதை போட்டியின் மூலம் தெரிந்திருக்கும். சாஹல் அபாரமாக பந்து வீசி வருகிறார். சாஹலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. போட்டிக்கு முன்பு தனியாக அவரிடம் உன்னாள் விளையாட முடியுமா என கேட்டேன். என்னால் முடியும். என்னை விளையாட விடுங்கள் என கூறினார்.
எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் சாட் தேர்வு மோசமாக அமைந்திருக்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் நல்ல எனர்ஜியுடன் செயல்பட்டார்கள்.
நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும், அது விறுவிறுப்பான போட்டியாக தான் அமைந்திருக்கும். இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. எங்கள் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நான் ஐபிஎல் போட்டிகளில் பல போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இதுதான் சிறந்த வெற்றியாக நான் கருதுகிறேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.