ஐ.பி.எல்.(IPL)

6 ஆண்டுகளுக்கு பின்பு 180+ டார்கெட்டை சேஸ் செய்து அசத்திய சி.எஸ்.கே. அணி

Published On 2025-05-08 08:10 IST   |   Update On 2025-05-08 08:10:00 IST
  • உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
  • அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

இந்த வெற்றியின்மூலம் 2019ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 180+ என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தியுள்ளது

கடந்த 6 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முயன்று 12 முறை தோல்வியை தழுவிய நிலையில், நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

Tags:    

Similar News