மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது விருப்பம்: அதை ஒருபோதும் கைவிட மாட்டேன்- ரகானே
- இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன்.
- அது என்னுடைய விருப்பம். அந்த தீ இன்னும் உள்ளே எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் ரகானா. வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் விருப்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன். அது என்னுடைய விருப்பம். அந்த தீ உள்ளே இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. உடற்தகுதியை பொறுத்தவரை, நான் அதற்கு தகுதியானவனாக இருக்கிறேன். தற்போது ஐபிஎல் போட்டியை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதன்பின் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
நான் ஒரு வீரராக ஒருபோதும் இந்திய அணிக்கு திரும்பும் விருப்பத்தை கைவிடமாட்டேன். மைதானத்தில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதுமே முயற்சிப்பேன். 100 சதவீதத்திற்கு மேலான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். தற்போதைய நிலையில் என்னுடைய ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.
இவ்வாறு ரகனே தெரிவித்தார்.