இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2ஆவது இன்னிங்சில் கே.எல். ராகுல் அபார சதம்
- முதல் இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
- இது அவரின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிவடைந்த பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 83 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கே.எல். ராகுலுக்கு முன்னதாக சதத்தை எட்டிவிடும் அளவிற்கு அற்புதமாக விளையாடினார்.
என்றாலும் 62ஆவது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து 202 பந்தில் சதம் விளாசினார். இவரது சதத்தில் 18 பவுண்டரிகள் அடங்கும். இந்தியா தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 99 பந்தில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.
கே.எல். ராகுலின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதம் இதுவாகும். முதல் இன்னிங்சில் 42 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.