கிரிக்கெட் (Cricket)
null

சிராஜ்- ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு.. 407 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்

Published On 2025-07-04 21:57 IST   |   Update On 2025-07-04 21:59:00 IST
  • ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 184 ரன்களுடன் இருந்தார்.
  • இந்தியா தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 184 ரன்களுடன் இருந்தார். இந்தியா தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags:    

Similar News