அபிஷேக் விக்கெட்டுதான் எங்களுடைய இலக்கு- கேப்டன் மார்க்ரம்
- நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன்.
- புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும்.
கட்டாக்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் தொடங்குகிறது.
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் சந்தித்தார்.
அப்போது அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்துவதுதான் எங்களுடைய இலக்கு என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான பையன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தான் எங்களுக்கு பெரிய விக்கெட்.
புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரை விரைவாக அவுட் ஆக்குவது எங்களுக்கு மிக முக்கியம்.
முதல் பந்திலிருந்தே அடித்து ஆட அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இதுதான் நவீன கிரிக்கெட். இது பார்ப்பதற்கு என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. மேலும் டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு பெறவும் இது அவர்களுக்கு உதவுகிறது
என்று மார்க்ரம் கூறினார்.
ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.