கிரிக்கெட் (Cricket)

2-வது டி20-யில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்- தொடரையும் கைப்பற்றி அசத்தல்

Published On 2025-07-22 21:26 IST   |   Update On 2025-07-22 21:26:00 IST
  • முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனை தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப்- அப்பாஸ் அஃப்ரிடி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்பாஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை போராடிய ஃபஹீம் அஷ்ரஃப் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News