கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்கதேசத்திற்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

Published On 2025-09-20 21:49 IST   |   Update On 2025-09-20 21:49:00 IST
  • தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
  • அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்துள்ளது.

Tags:    

Similar News