கிரிக்கெட் (Cricket)

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் யுவராஜ் சிங், உத்தப்பாவிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

Published On 2025-09-16 12:33 IST   |   Update On 2025-09-16 12:33:00 IST
  • சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
  • ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பாவிற்கு அமலாக்கத்துறை (ED ) சம்மன் அனுப்பியுள்ளது.

சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோரும் முன்னதாக விசாரிக்கப்பட்டனர்.

பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News