கிரிக்கெட் (Cricket)

ஆர்சிபி அணியை கைப்பற்ற துடிக்கும் அதானி, சீரம் உள்பட 6 நிறுவனங்கள்

Published On 2025-10-17 15:55 IST   |   Update On 2025-10-17 15:55:00 IST
  • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
  • கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகினது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது. அதேபோல அதானி குழுமமும் ஆர்வமாக உள்ளது.

மேலும் பார்த் ஜிண்டால் (ஜே.எஸ்.டபிள்யூ குழுமம்), டெல்லியைச் சேர்ந்த பல துறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர்,

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது.

ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News