விளையாட்டு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை அனுபமா முதல் சுற்றில் வெற்றி
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.
முதல் செட்டை 21-15 என அனுபமா வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 21-18 என ராஷ்மிகா கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என அனுபமா உபாத்யாயா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் அனுபமா, சீனா வீராங்கனை வாங் ஜியீயை எதிர்கொள்கிறார்.