விளையாட்டு
அரை சதமடித்த நிதிஷ் ராணா

ஐதராபாத் அணி வெற்றி பெற 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

Published On 2022-04-15 21:39 IST   |   Update On 2022-04-15 21:39:00 IST
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் கடைசி கட்டத்தில் இறங்கிய ஆண்ட்ரூ ரசல் அதிரடியாக ஆடி 25 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.
மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் அவுட்டானார்.

ஷ்ரேயஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடினர். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஐதராபாத் சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News