விளையாட்டு
தீபக் சாஹர்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகல்

Published On 2022-04-13 06:23 IST   |   Update On 2022-04-13 06:23:00 IST
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தீபக் சாஹர் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியானது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News