விளையாட்டு
மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

Published On 2022-02-23 09:30 IST   |   Update On 2022-02-23 09:30:00 IST
மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் புதுமுக வீரராக பஞ்சாப்பை சேர்ந்த 25 வயது முன்கள வீரர் சுக்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 2 முறை மோதுகிறது. இந்த போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் ஆடும் இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் புதுமுக வீரராக பஞ்சாப்பை சேர்ந்த 25 வயது முன்கள வீரர் சுக்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், சுராஜ் கார்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), மன்தீப் மோர், சுரேந்தர் குமார், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், ஜஸ்கரன் சிங், ஷாம்ஷெர் சிங், நீலகண்ட ஷர்மா, ஆகாஷ்தீப் சிங், முன்களம்: மன்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக்.

Similar News