விளையாட்டு
சிஎஸ்கேவுடன் போராடி ஷாருக் கானை ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
பெங்களூர்:
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
2021-ம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக தமிழக வீரர் ஷாருக் கான் விளையாடி வந்தார். இவருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 9 கோடி ரூபாய்க்கு எடுத்தது.