செய்திகள்
சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் அணி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.