செய்திகள்
ஜாஸ் பட்லர்

சதம் விளாசிய பட்லர்- இலங்கையின் வெற்றிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2021-11-01 15:53 GMT   |   Update On 2021-11-01 15:53 GMT
67 பந்துகளை எதிர்கொண்ட ஜாஸ் பட்லர் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் மொத்தம் 101 ரன்கள் விளாசினார்.
சார்ஜா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் ஜாஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஜேசன் ராய் 9 ரன்களிலும், தாவித் மலன் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

45 பந்துகளில் அரை சதம் கடந்த பட்லர், தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் கேப்டன்  மார்கன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19வது ஓவரில், அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்த நிலையில் மார்கன் 40 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து ஆடிய பட்லர் கடைசி பந்தில் சிக்சர் விளாசி சதத்தை பதிவு செய்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட பட்லர்  6 பவுண்டரி, 6 சிக்சருடன் மொத்தம் 101 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். 

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3  விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
Tags:    

Similar News