செய்திகள்
ஜோ ரூட்

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.சி.சி.-யின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோ ரூட்

Published On 2021-09-13 10:21 GMT   |   Update On 2021-09-13 10:21 GMT
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார்.
ஐ.சி.சி. மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதம் சிறந்த வீரராக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தார். இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பெண்களுக்கான கிரிக்கெட்டில் அயர்லாந்து ஆல்-ரவுண்டர் எய்மியர் ரிச்சார்ட்சன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜோ ரூட் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் விளாசினார். அத்துடன் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News