செய்திகள்
ஒருநாள் போட்டியில் 4 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் ‘நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுகிறேன். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2015-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியால் இடம் பிடிக்க முடியவில்லை. இவர் வங்காளதேசம் அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.