செய்திகள்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் - துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதிக்கு முன்னேற்றம்
டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிசில் பவினா பென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.