செய்திகள்
ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பம்: காலக்கெடுவை நீட்டித்தது பி.சி.சி.ஐ.

Published On 2021-08-18 15:55 GMT   |   Update On 2021-08-18 15:55 GMT
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பி.சி.சி.ஐ.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. அதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15-ந்தேதி எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது.

டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் அவர் வகித்து வரும் பதவிக்கு யாருமே விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News