செய்திகள்
மூடப்பட்டுள்ள ஆடுகளம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மழையால் நழுவும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு

Published On 2021-08-08 17:48 IST   |   Update On 2021-08-08 20:41:00 IST
நாட்டிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு இன்றைய கடைசி நாளில் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில், மழை குறுக்கீடு செய்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்தியா 278 ரன்கள் குவித்தது.

95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (109) சதத்தால் 303 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இந்தியாவுக்கு 209 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. இந்தியா நேற்றைய 4-வதுநாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற நிலைய இந்தியா களம் இறங்க இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை பெய்து வருகிறது.

ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. தேநீர் இடைவேளை வரை போட்டி நடைபெறவில்லை என்றால், டிரா என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Similar News