செய்திகள்
லால்ரெம்சியாமி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு அரசு வேலை- மிசோரம் முதல்வர் அறிவிப்பு

Published On 2021-08-06 10:24 GMT   |   Update On 2021-08-06 10:24 GMT
ஒலிம்பிக் பயிற்சிக்காக லால்ரெம்சியாமிக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று மிசோரம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஐசால்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும், ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதால் பாராட்டுகள் குவிகின்றன.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம்பெற்ற மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு அரசு வேலை மற்றும் சொந்த ஊரில் வீட்டு மனை வழங்கப்படும் என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் பயிற்சிக்காக அவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News