செய்திகள்
இந்திய ஆண்கள் ஆக்கி அணி வீரகள்

ஆக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு அறிவிப்பு

Published On 2021-08-05 08:06 GMT   |   Update On 2021-08-05 10:27 GMT
இந்திய ஆக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி புதிய வரலாறு படைத்தது. வெண்கல வென்ற இந்திய ஆக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ‌ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News