செய்திகள்
அனிருத் தபா

இந்திய கால்பந்து வீரர் அனிருத் தபா கொரோனாவால் பாதிப்பு

Published On 2021-06-06 06:25 IST   |   Update On 2021-06-06 06:25:00 IST
இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நடுகள வீரரான 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்
புதுடெல்லி:

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நடுகள வீரரான 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்காளதேசத்தையும், வருகிற 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் அனிருத் தபா விளையாட முடியாது.

Similar News