செய்திகள்
வினேஷ் போகத்

மல்யுத்தம்: சோனம் மாலிக், வினேஷ் போகத் உள்பட 6 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Published On 2021-04-11 10:19 GMT   |   Update On 2021-04-11 10:19 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவை சேர்ந்த ஆறு வீரர்- வீராங்கனைகள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.
ஜப்பான் டோக்கியோ நகரில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

கொரோனா தொற்றால் ஒன்றிரண்டு நாடுகள் ஜப்பான் செல்ல தயக்கம் காட்டு வருகின்றன. ஆனால் ஜப்பான் சென்று விளையாட இந்தியா தயக்கம் காட்டவில்லை.

இந்த நிலையில் இந்தியா சார்பில் மல்யுத்தம் போட்டிக்கு ரவி தாகியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.



இன்னும் நடைபெறும் தகுதிச் சுற்றுக்கான தொடரில் வெற்றி பெற்றால் மேலும் பல வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News