செய்திகள்
ஸ்ரேயாஸ் அய்யர் காயமடைந்த காட்சி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம்

Published On 2021-03-24 18:48 IST   |   Update On 2021-03-24 18:48:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது  இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 8-வது ஓவரில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் அடிந்த பந்தை தடுக்க  இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்  பாய்ந்து விழுந்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. 

வலியால் துடித்த அவர் அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். காயத்தன்மையை அறிய ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முதல் கட்டமாக தெரிகிறது.

எனினும், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பிறகு அறுவை சிகிச்சை வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யப்படும். எனவே, அறுவை சிகிச்சை செய்யப்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் முழுமையாக விலக வேண்டியிருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News