செய்திகள்
பிவி சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2021-03-17 20:26 GMT   |   Update On 2021-03-17 20:26 GMT
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியாவின் சிந்து, சாய்னா உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
பர்மிங்காம்:

நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்தித்தார். 

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சிந்து இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், பிவி சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட்களில் சோனியாவை வென்றார். இந்த ஆட்டம் சுமார் 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News