செய்திகள்
ஐசிசி

மேட்ச் பிக்சிங்: இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தலா 8 ஆண்டுகள் தடைவிதித்தது ஐசிசி

Published On 2021-03-16 18:24 IST   |   Update On 2021-03-16 18:24:00 IST
2019-ம் ஆண்டு நடைபெற்று டி20 உலககோப்பை தகுதிச் சுற்றின்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட முயன்றதாக ஐக்கியர அரபு அமீரகம் அணி வீரர்கள் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான முகமது நவீத் (வயது 33), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷைமான் அன்வர் ஆகியோர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றுத் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஐசிசி ஊழல் தடுப்புக்குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இருவருக்கு தலா 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

நவ்தீப் 39 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 42 வயதாகும் ஷைமான் அன்வர் பட் 40 ஒருநாள் மற்றும் 32 டிடி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Similar News