செய்திகள்
பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை

Published On 2021-02-27 12:51 GMT   |   Update On 2021-02-27 12:51 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. 4வது போட்டி மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (வயது 27) விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார். கடைசி போட்டியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிசிசிஐயிடம் கூறியிருக்கிறார். அதன்படி, அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதில் கூடுதல் வீரர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4வது போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பன்ட், விர்த்திமான் சகா, அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
Tags:    

Similar News