செய்திகள்
மனோஜ் திவாரி

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா கட்சியில் இணைந்தார்: சட்டசபை தேர்தலில் போட்டி

Published On 2021-02-24 10:17 GMT   |   Update On 2021-02-24 10:17 GMT
மேற்கு வங்காள கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி. இந்திய அணியில் களம் இறங்கி சதம் அடித்த போதிலும் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இவர் மேற்கு வங்காள கிரிக்கெட் அணிக்காக அதிக அளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

35 வயதான மனோஜ் திவாரி இன்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமயிலான ஆட்சி வருகிறது 30-ந்தேதி முடிவடைகிறது.

இதனால் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுடன் மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளது.

மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். மூன்று டி20 போட்டிகளில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.
Tags:    

Similar News