செய்திகள்
கங்குலி

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் கங்குலி

Published On 2021-01-30 09:21 GMT   |   Update On 2021-01-30 09:21 GMT
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு கடந்த 2-ந் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கங்குலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதய தமணியில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அப்தாப்கான், அஸ்வின் மேத்தா ஆகியோர் கங்குலியின் உடல்நிலையை பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News