செய்திகள்
முகமது சிராஜ்

சிட்னி டெஸ்ட்: தேசிய கீதம் ஒலிக்கும்போது எமோஷனல் ஆகி அழுத முகமது சிராஜ்

Published On 2021-01-07 10:01 GMT   |   Update On 2021-01-07 14:19 GMT
சிட்னி போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கும்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எமோசனாகி கண்ணீர் விட்ட காட்சி வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மைதானத்தில் வரிசையாக நிற்க, இருநாட்டின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும்.

இந்திய தேசியக் கீதம் ஒலித்தபோது, மெல்போர்ன் போட்டியில் அறிமுகம் ஆன முகமது சிராஜ் எமோஷனலாகி கண்ணீர் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் வீரர்களான முகமது கைஃப் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் முகமது சிராஜ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா தொடர் தொடங்குவதற்கு முன் முகமது சிராஜின் தந்தை காலமானார். அதற்காக இந்தியா திரும்பாமல் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார். மெல்போர்னில் டெஸ்டில் அறிமுகம் ஆகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அனைவரது ஆதரவையும் பெற்றார்.

இன்று தொடங்கிய சிட்னி டெஸ்டிலும் வார்னர் சொற்ப ரன்களில் வெளியேற்றினார்.
Tags:    

Similar News