செய்திகள்
கோப்புப்படம்

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி

Published On 2021-01-03 19:12 GMT   |   Update On 2021-01-03 19:12 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது
கோவா:

11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒடிசா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்திக்கிறது.
Tags:    

Similar News