செய்திகள்
கி்ப்ஸ்

லங்கா பிரிமீயர் லீக்: தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் கிப்ஸ்

Published On 2020-12-13 17:19 GMT   |   Update On 2020-12-13 17:19 GMT
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், லங்கா பிரிமீயர் லீக்கில் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த நாடு திரும்புகிறார்.
லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கிப்ஸ் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், பதவியை ராஜினாமா செய்து விட்டு அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார்.

கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக கொழும்பு வரவில்லை. வர்ணனையாளராகத்தான் வந்தார். கொழும்பு அணியின் தலைமை பயிற்சியாளர் வாட்மோர் சொந்த விசயத்திற்காக வெளியேறினார். அதன்பின் கபிர் அலி பதவியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட, கிப்ஸ் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
Tags:    

Similar News