செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா, ஜாகீர் கான்

ஹர்திக் பாண்ட்யா நற்பெயரை உருவாக்கப் போகிறார்: ஜாகீர் கான்

Published On 2020-12-07 12:19 GMT   |   Update On 2020-12-07 12:19 GMT
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனான ஹர்திக் பாண்ட்யா நற்பெயரை உருவாக்கப் போகிறோர் என்று ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்து வீசவில்லை என்றாலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

இரண்டு டி20 போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், ஹர்திக் பாண்ட்யா நற்பெயரை உருவாக்கப் போகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘எந்தவொரு கட்டத்திலும் ஹர்திக் பாண்ட்யா டாட் பாலால் விரக்தி அடையமாட்டார். சாந்தமாகவே இருப்பார். எனென்றால், அவரை நம்புகிறார். அவரால் எந்த நேரத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்பதால் பந்து வீச்சாளரின் தவறுக்காக காத்திருப்பார். பந்து வீச்சாளர் நெருக்கடியில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்வார்.

அவரது கேரியரில் செல்ல செல்ல, அவர் நற்பெயர் சேர்க்கப்போகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். எந்தவொரு பவுலரும் அவருக்கு பந்து வீசுவது கடினமானதாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News