செய்திகள்
மார்க் வாக்

பொதுவான டாக்டரை நியமிக்க வேண்டும்: ஐசிசி-க்கு மார்க் வாக் கோரிக்கை

Published On 2020-12-06 11:28 GMT   |   Update On 2020-12-06 11:28 GMT
ஜடேஜா காயத்தால் வெளியேறியது சர்ச்சையை எழுப்பிய நிலையில், பொதுவான டாக்டரை நியமிக்க ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும் என மார்க் வாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நடைபெற்றது. ஜடேஜா பேட்டிங் செய்யும்போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்து போனார்.

ஜடேஜா சற்று மயக்கமாக இருப்பதாக தோன்றியதால் கன்கசன் மாற்று வீரராக சாஹல் களம் இறங்கினார். அவர் 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஜடேஜாவுக்கு உண்மையிலேயே விளையாட முடியாத அளவிற்கு மயக்கம் இருந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது, போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விமர்சனத்தை தடுக்க ஐசிசி போட்டியின்போது பொதுவான டாக்டரை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மார்க் வாக் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News