செய்திகள்
இஷாந்த் சர்மா

தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு வேகத்துடன் பந்து வீசிய இஷாந்த் சர்மா: ஆஸி. பறக்க வாய்ப்பு

Published On 2020-11-19 12:38 GMT   |   Update On 2020-11-19 12:38 GMT
ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் இஷாந்த் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு வேகத்துடன் பந்து வீசி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் ஒரேயொரு போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது பக்கம் இடுப்புப் பகுதியில் தசைநார் கிழிந்தது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

தொடருக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட், பிசியோ ஆஷிஷ் கவுசிக் ஆகியோர் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார். விரைவில் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News