செய்திகள்
சுமரிவாலா

இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக சுமரிவாலா மீண்டும் தேர்வு

Published On 2020-10-31 20:50 GMT   |   Update On 2020-10-31 20:50 GMT
இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குர்கிராம்:

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குர்கிராமில் நேற்று நடந்தது. இதில் 2020-24-ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தலைவராக தேர்வானார்.

முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சீனியர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் பொறுப்பை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறையாகும். ரவிந்தர் சவுத்ரி செயலாளராகவும், மதுகாந்த் பதக் பொருளாளராகவும், 5 இணைச் செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த சி.லதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Tags:    

Similar News