செய்திகள்
பிரையன் லாரா, ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியமான சொத்து: பிரையன் லாரா

Published On 2020-10-10 10:29 GMT   |   Update On 2020-10-10 10:29 GMT
இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியமான சொத்து என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பருடன் பேட்ஸ்மேன் பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மிடில் ஆர்டர் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் முக்கியமான சொத்து என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான மிகப்பெரிய சொத்து. தற்போது ஆட்டத்தை மிகப்பெரிய அளவில் முன்னேற்றியுள்ளார். அவரது பேட்டிங் மற்றும் முன்னேற்றம் அடைந்தது குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உடனடியாக கவனித்துக் கொள்வது எல்லா பந்துகளையும் லெக் சைடு அடிக்க பார்ப்பதுதான்.

லெக் சைடு அடிக்கும் ஷாட்டில் எந்த பயனும் இல்லை. அப்படி விளையாடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்து ஆஃப் சைடு பந்தை அடிக்க முயற்சி செய்துள்ளார்.

அவரிடம் உண்டான மாற்றத்தால் மைதானத்தின் எல்லா பக்கத்திலும் ரன்கள் அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். அவரது ரன் விகிதம் ஈர்க்கும் வகையில் இருக்கும்போது, அந்த பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News