செய்திகள்
அக்சார் பட்டேல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

Published On 2020-10-09 21:32 IST   |   Update On 2020-10-09 21:32:00 IST
ஹெட்மையர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தாக்குப்பிடித்து விளையாடியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சரியான தொடக்கம் கிடைக்காததால் டெல்லி அணியின் உத்வேகம் குறைந்தது, ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலம், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் வெளியேறினர்.

ஷார்ஜா ஆடுகளம் ரன் குவிக்கும் இடமாக இருக்கும் நிலையில் டெல்லிக்கு இன்று சறுக்கல் ஏற்பட்டது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது.

அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார். டெல்லி அணிக்கு 19-வது ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. 19 ஓவரில் 181 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரை ஆர்சர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் 184 ரன்கள் அடித்துள்ளது.

Similar News