செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட்: 16 ஓவர் முடிவில் சென்னை 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், விஜய் களமிறங்கினர். ஆனால் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
அடுத்து வந்த டூபிளசிஸ், அம்பதி ராயுடு ஜோடி சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை வெற்றி பெற 4 ஓவர்களில் இன்னும் 42 தேவைப்படுகிறது.
டூபிளசிஸ் 41 ரன்களுடனும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.