செய்திகள்
ஹர்பஜன் சிங்

ரெய்னாவைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்

Published On 2020-09-04 09:42 GMT   |   Update On 2020-09-04 09:42 GMT
சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது. ஹர்பஜன் சிங் அணியுடன் அப்போது செல்லவில்லை. ஓட்டல் அறையில் வீரர்கள் தனிமப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News