செய்திகள்
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவாரா?
ஐக்கிய அரபு அமீரகம் புறப்படாமல் இருக்கும் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பயிற்சி மேற்கொண்டது. இதில் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் சென்னை சூப்ப் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டு சென்றது. அப்போது ஹர்பஜன் சிங் அணியுடன் செல்லவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்கள் துபாய் சென்றடைந்துள்ளனர். ஹர்பஜன் சிங் மட்டும் இன்று தனிப்பட்ட காரணத்தால் புறப்படாமல் இருக்கிறார். இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே துணைக் கேப்டன் ரெய்னா சொந்த காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியுள்ளார். 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.