செய்திகள்
அனில் கும்ப்ளே, கேஎல் ராகுல்

கும்ப்ளே எனது கேப்டன் பணியை எளிமையாக்கிவிடுவார்: பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் சொல்கிறார்

Published On 2020-08-26 02:32 GMT   |   Update On 2020-08-26 02:32 GMT
தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே எனது கேப்டன் பணியை எளிமையாக்கிவிடுவார் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் உள்ளார். முதன்முறையாக அவர் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ளார்.

அனில் கும்ப்ளே எனது கேப்டன் பணியை எளிமையாக்கிவிடுவார் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற ஒருவர் அருகில் இருந்து எனக்கு உதவும்போது இந்த சீசன் மகத்தானதாக இருக்கும். நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருடன் கிரிக்கெட்டிற்கு வெளியேயும் சிறந்த அளவில் நட்பு வைத்துள்ளேன். 

அனில் கும்ப்ளே எனது கேப்டன் பதவியை மிகவும் எளிமையாக்கிவிடுவார் என்று நினைக்கிறேன். பெரும்பாலான திட்டங்கனை அவர் வகுத்து விடுவார். நான் மைதானம் சென்று அந்த திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான்.

இதற்கு முன்பும் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்காக அதிக அளவில் ரன்கள் குவித்துள்ளார். அவர் எங்கள் அணிக்கு தேவை என்பதால் ஆக்சனில் மிகவும் தெளிவாக இருந்தோம். அவருடைய நாட்களில் எந்தவொரு பந்து வீச்சாளரையும் துவம்சம் செய்துவிடுவார். கடந்த சில சீசனில் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்களை இழந்து விட்டோம்’’ என்றார்.
Tags:    

Similar News