செய்திகள்
ஆரோன் பிஞ்ச்

ஆரோன் பிஞ்சின் கடைசி தேதி: மிகப்பெரிய இலக்கு வைத்திருக்கிறார்....

Published On 2020-08-19 14:39 IST   |   Update On 2020-08-19 14:39:00 IST
2023-ல் இந்தியாவில் நடைபெறும் 50 உலக கோப்பையின் இறுதி போட்டிதான் கிரிக்கெட்டில் தன்னுடைய கடைசி தேதி என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் உள்ளார். இவர் சிறந்த தொடக்க வீரராவார். 33 வயதான இவர் நீண்ட காலமாக விளையாடுவாரா? என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது.

ஆனால் 2023-ல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலக கோப்பையின் இறுதிப் போட்டிதான் அவரடைய கிரிக்கெட்டில் இறுதி தேதியாக இருக்கும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலககோப்பையின் இறுதி போட்டிதான் என்னுடைய கடைசி தேதியாகும். அதுதான் என்னுடைய இலக்கு. அதில் உறுதியாக இருக்கிறேன்.

அது நீண்ட காலம்தான். இருந்தாலும், என்னால் அந்த காலத்தை உறுதி செய்யமுடியும். அப்போது எனக்கு 36 வயதாகும். ஃபார்ம், காயம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும்’’ என்றார்.

Similar News